Tamil News Today
முக்கிய செய்திகள்
அமெரிக்க முற்றுகைக்குப் பிறகு, சரக்கு ஏற்றப்பட்ட முதல் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் வளைகுடாவை விட்டு வெளியேறின என கெப்ளர் தெரிவித்தார். தமிழகத் தேர்தல்களில் ஆண்களின் ஆதிக்கமே ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி! பாடசாலை மாணவிகளுக்கு 2026 ஆம் ஆண்டில் வெளியான முக்கிய அறிவிப்பு வெளியானது! 2027ஆம் ஆண்டு முதல் கல்வி அமைப்பில் மாற்றம்: புதிய அறிவிப்பு வெளியீடு! இன்றைய 12 ராசிகளுக்கான ராசிபலன் (17.04.2026) இலங்கையில் தங்கியிருந்த இரான் நாட்டு மாலுமிகளில் 238 பேர் சமீபத்தில் நாடு திரும்பினர்! தொடருந்து சேவைகள் குறித்து புதிய அறிவிப்பு வெளியீடு!

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம்

SR
Sri
in உலகம்-மத்திய கிழக்கு
Sunday, 29 March, 2026 - 09:12 AM 4567 Views

மத்திய இஸ்ரேலின் பெய்ட் ஷமேஷ் நகருக்கு அருகிலுள்ள எஷ்டாவோல் (Eshtaol) கிராமத்தின் மீது ஈரான் நடத்திய நேரடி ஏவுகணைத் தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்தத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் கிராமமொன்றின் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம் ஈரானிய ஏவுகணை நேரடியாகக் குடியிருப்பு ஒன்றின் மீது விழுந்து வெடித்ததில் அங்கு பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், ஏராளமான கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக இராணுவத்தின் 'ஹோம் ப்ரொண்ட் கமாண்ட்' (Home Front Command) தளபதி ஓஹாத் மோயல் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் நடவ் ஷோஷானி, எஷ்டாவோல் கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தின் வீடு ஈரானிய ஏவுகணையால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான காணொளி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்