ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் – இருபுறமும் அமெரிக்க போர்க்கப்பல்கள், கடும் எச்சரிக்கை
ஈரான் உடனான அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தற்போது 19 போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளதுடன், நீரிணையின் இருபுறமும் அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கண்ணிவெடிகளை வீசும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்றும் அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் உயர் தலைவர் மோஜ் தபா கொமெய்னி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் தேசப்பற்றாளர்களின் ஒற்றுமையால் எதிரிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. ஈரான் மக்களின் மனதில் அச்சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்கிறது.இதற்கு இடம் கொடுக்கக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்துக்கள்