ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் – இருபுறமும் அமெரிக்க போர்க்கப்பல்கள், கடும் எச்சரிக்கை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23, 2026) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு சரியாகத் தொடங்க உள்ளது. ஈரானின் உள்கட்டமைப்புக்கு டிரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் திரும்புகின்றனர். கப்பல்களுடன் நீர்நிலைகளின் மீது பறக்கும் ஹெலிகாப்டர்கள். சுருக்கம் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் – இருபுறமும் அமெரிக்க போர்க்கப்பல்கள், கடும் எச்சரிக்கை

KO
Kobika
in உலகம்-மத்திய கிழக்கு
Saturday, 25 April, 2026 - 01:54 PM 33 Views

ஈரான் உடனான அமை​திப்பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் திட்​ட​மிட்டுள்​ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தற்​போது 19 போர்க்கப்பல்​கள் மத்​திய கிழக்​கில் முகாமிட்டுள்​ளதுடன், நீரிணை​யின் இரு​புறமும் அமெரிக்க போர்க்கப்பல்​கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “காலம் கடந்து சென்று கொண்​டிருக்​கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்று எச்சரித்துள்​ளார்.

மேலும் கண்​ணிவெடிகளை வீசும் ஈரான் படகு​களை சுட்டு வீழ்த்த ஜனாதிபதி ட்ரம்ப் உத்​தர​விட்டுள்​ளார் என்றும் அமெரிக்​க இராணுவ வட்டாரங்கள்​ தெரி​வித்​துள்ளன.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் உயர் தலை​வர் மோஜ் தபா கொமெய்னி நேற்று வெளியிட்ட அறிக்கை​யில், “ஈரான் தேசப்​பற்றாளர்​களின் ஒற்​றுமை​யால் எதிரிகளின் கூட்ட​ணி​யில் விரிசல் ஏற்​பட்டு இருக்​கிறது. ஈரான் மக்களின் மனதில் அச்சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்​கிறது.இதற்கு இடம் கொடுக்கக்​ கூ​டாது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்