உக்ரைன் போர்: "நேட்டோவின் உறுதிப்பாடு குறித்து சந்தேகத்தை" உருவாக்குவதன் மூலம் டொனால்ட் டிரம்ப் நேட்டோவை பலவீனப்படுத்துவதாக இம்மானுவேல் மக்ரோன் குற்றம் சாட்டினார்.
உக்ரைன் போர் பின்னணியில், நேட்டோ கூட்டணியின் ஒற்றுமை குறித்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
நேட்டோவின் பாதுகாப்பு உறுதிப்பாட்டை பற்றி சந்தேகம் எழும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவது, இந்த கூட்டணியின் வலிமையை பலவீனப்படுத்தும் என மக்ரோன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டிரம்ப் கூறியிருந்த “பாதுகாப்பு செலவினத்தை உயர்த்தாத நாடுகளை அமெரிக்கா பாதுகாக்காமல் இருக்கலாம்” என்ற கருத்து தற்போது மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில்,
நேட்டோ நாடுகளின் ஒற்றுமை மற்றும் நம்பிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படியான கருத்துக்கள் எதிரிகளுக்கு ஆதரவாக அமையலாம் என உலக அரசியலில் புதிய பதற்றத்தை உருவாக்கும் இந்த விவகாரம், நேட்டோ கூட்டணியின் எதிர்காலத்தை பாதிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வாசகர் கருத்துக்கள்