முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்- கனடா | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்- கனடா

PI
piragash
in உலகம்-கனடா
Saturday, 04 April, 2026 - 09:45 PM 3963 Views

கனடாவின் பிரெம்ரன் நகரின் சிங்குவாகூசி பூங்காவில் உள்ள முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தில் இழிவான வாசகங்களை தீந்தைமூலம் எழுதி அதனை சேதப்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  5000 USD டொலருக்கு மேலான சேதப்படுத்தல் செலவீனம் உட்பட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட குறித்த 14 வயது சிறுவன் விரைவில் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

சிறுவன் கைது

நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதாக கிட்டிய முறையீடுகளை அடுத்து சிங்குவாகூசி பூங்காவிற்கு சென்ற காவற்துறை குறித்த சேதத்தை உறுதிசெய்ததுடன் உடனடியாக இந்த விசாரணையை வெறுப்புக் குற்றப் பிரிவிடம் ஒப்படைத்த நிலையில் விசாரணைக்குப்பின்னர் பிராம்ப்டனைச் சேர்ந்த குறித்த சிறுவன் செய்யப்பட்டிருந்தார்.

எனினும் கனடாவின் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் சிறார் சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்பதால் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்