முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்- கனடா | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத டி20 போட்டியில் டெல்லி வெற்றி ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெய்ஜிங்கில் சொர்க்கக் கோயிலுக்கு சென்ற ஷி ஜின்பிங் – டிரம்ப் சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 மே 2026 தாய்லாந்து அரசியலில் அதிரடி மாற்றம்: சிறையிலிருந்து விடுதலையானார் தக்சிண் ஷினாவத்ரா! இன்றைய ராசிபலன் – மே 10, 2026 ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வாக்குமூலம்!

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்- கனடா

PI
piragash
in உலகம்-கனடா
Saturday, 04 April, 2026 - 09:45 PM 3943 Views

கனடாவின் பிரெம்ரன் நகரின் சிங்குவாகூசி பூங்காவில் உள்ள முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தில் இழிவான வாசகங்களை தீந்தைமூலம் எழுதி அதனை சேதப்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  5000 USD டொலருக்கு மேலான சேதப்படுத்தல் செலவீனம் உட்பட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட குறித்த 14 வயது சிறுவன் விரைவில் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது

சிறுவன் கைது

நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதாக கிட்டிய முறையீடுகளை அடுத்து சிங்குவாகூசி பூங்காவிற்கு சென்ற காவற்துறை குறித்த சேதத்தை உறுதிசெய்ததுடன் உடனடியாக இந்த விசாரணையை வெறுப்புக் குற்றப் பிரிவிடம் ஒப்படைத்த நிலையில் விசாரணைக்குப்பின்னர் பிராம்ப்டனைச் சேர்ந்த குறித்த சிறுவன் செய்யப்பட்டிருந்தார்.

எனினும் கனடாவின் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் சிறார் சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்பதால் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்