ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை -புத்தக விமர்சனம் சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம்: பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள்

ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை

TN
TNT Admin
in உலகம்-மத்திய கிழக்கு
Sunday, 29 March, 2026 - 06:45 AM 80 Views

மத்திய கிழக்கு நாடுகளில் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் வேலை செய்வோரை விலகி இருக்கும்படி ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது. அமெரிக்கப் படையினருக்கு அருகே வசிப்பவர்களுக்கும் அத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு முழுதும் அமெரிக்கப் படையினர் தங்கியிருக்கும் இடங்கள், ஹோட்டல்களைக் குறிவைத்திருப்பதாக ஈரான் சொன்னது. ஈரானின் தொழில்சாலைப் பகுதிகளில் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தியதை அடுத்து எச்சரிக்கை வந்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தை நெருங்குகிறது. தற்காப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராய் இருப்பதாக வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) தாண்டிச் செல்ல முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்