1 தொடக்கம் 3 வயது குழந்தைகளின் உளவியல் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
விண்வெளி சுற்றுலா: கனவா, நிஜமா? கடல்நீரை குடிநீராக மாற்றும் புதிய தொழில்நுட்பங்கள் விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் முயற்சிகள் பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நுண்ணுயிரிகள்: புதிய அறிவியல் நம்பிக்கை தூய்மையான மற்றும் முடிவில்லா ஆற்றலை நோக்கி: Fusion Energy துறையில் புதிய சாதனை AI முதலீடுகள் உலக பொருளாதாரத்தை எப்படி மாற்றுகின்றன? 2026 உலக வணிக உலகின் முக்கிய போக்குகள் உலக வர்த்தகத்தின் எதிர்காலம்: அரசியல் பதற்றங்களையும் மீறி வளருமா?

1 தொடக்கம் 3 வயது குழந்தைகளின் உளவியல்

KO
Kobika
in மருத்துவம்
Friday, 01 May, 2026 - 06:43 AM 108 Views

குழந்தையின் வாழ்க்கையில் 1 முதல் 3 வயது வரை உள்ள காலம் “Toddler” நிலையாக அழைக்கப்படுகிறது. இந்த பருவம் உடல் வளர்ச்சிக்குப் போலவே மன வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது. இந்த வயதில் குழந்தைகள் உலகத்தை அறிந்து கொள்ளும் விதம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறை, சமூக உறவுகள் உருவாகும் விதம் ஆகியவை அவர்களின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கின்றன.

Toddler பருவம் என்றால் என்ன?

1–3 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் “toddler” எனப்படுகின்றனர். அவர்கள் நடக்க கற்றுக்கொள்வதும், பேச ஆரம்பிப்பதும், சுற்றுப்புறத்தை ஆராய்வதும் இந்த காலகட்டத்தில் தான் நடைபெறும்.

மன வளர்ச்சியின் முக்கிய அம்சங்கள்

1. ஆர்வம் மற்றும் ஆராய்ச்சி

இந்த வயதில் குழந்தைகள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். எதையும் தொட்டு பார்க்கவும், சுவைத்து பார்க்கவும் முயற்சிப்பார்கள். இது அவர்களின் கற்றல் முறையின் ஒரு முக்கிய பகுதி.

2. சுயாதீனம் (Independence)

“நான் தான் செய்வேன்” என்ற மனநிலை இந்த வயதில் அதிகமாக காணப்படும். இது அவர்களின் தனித்தன்மை உருவாகும் முதல் கட்டமாகும்.

3. உணர்ச்சி வெளிப்பாடு

Toddler குழந்தைகள் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் இருப்பதால், கோபம், அழுகை, சிரிப்பு போன்றவை திடீரென வெளிப்படும். “Tantrum” (கோப வெடிப்பு) இது மிகவும் சாதாரணமானது.

4. மொழி வளர்ச்சி

இந்த வயதில் குழந்தைகள் புதிய சொற்களை கற்றுக்கொண்டு, சிறிய வாக்கியங்களில் பேசத் தொடங்குவார்கள். பெற்றோரின் பேச்சு முறை இதற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

5. சமூக பழக்கம்

மற்ற குழந்தைகளுடன் விளையாடத் தொடங்குவார்கள். ஆனால் “sharing” (பகிர்வு) என்ற கருத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.

பெற்றோரின் பங்கு

குழந்தைக்கு பாதுகாப்பான மற்றும் அன்பான சூழல் வழங்குதல்

அவர்களின் ஆர்வத்தை ஊக்குவித்தல்

கோபம் வந்தபோது அமைதியாக கையாளுதல்

பேசும் திறனை வளர்க்க தொடர்ந்து உரையாடுதல்

நல்ல பழக்கங்களை மெதுவாக கற்றுக்கொடுப்பது

கவனிக்க வேண்டியவை

குழந்தை பேசாமல் இருந்தால்

கண் தொடர்பு இல்லாமல் இருந்தால்

மிக அதிக கோபம் அல்லது அமைதியின்மை இருந்தால்

இவை இருந்தால் மருத்துவ நிபுணரை அணுகுவது நல்லது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்