செவ்வாய் ஆராய்ச்சியில் முன்னேற்றம்: நாசா விண்கலம் மூலம் புதிய கண்டுபிடிப்பு | தொழில்நுட்பம்
முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23, 2026) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு சரியாகத் தொடங்க உள்ளது. ஈரானின் உள்கட்டமைப்புக்கு டிரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் திரும்புகின்றனர். கப்பல்களுடன் நீர்நிலைகளின் மீது பறக்கும் ஹெலிகாப்டர்கள். சுருக்கம் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ

செவ்வாய் ஆராய்ச்சியில் முன்னேற்றம்: நாசா விண்கலம் மூலம் புதிய கண்டுபிடிப்பு

KO
Kobika
in தொழில்நுட்பம்
Thursday, 23 April, 2026 - 09:31 PM 6 Views

செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருந்ததா என்பது பற்றி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தை ஆராய 2012-ல் அனுப்பப்பட்டது.

இது செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து, அங்குள்ள பாறைகளில் கரிம மூலக்கூறுகள் மற்றும் நீரின் தடயங்களை கண்டறிந்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்ந்ததற்கான புதிய ஆதாரமாக இதுவரை கண்டறியப்படாத மிகச் சிக்கலான 7 கரிம மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள பாறைகளில் உயிரினங்களின் அடிப்படையாகக் கருதப்படும் நைட்ரஜன் மற்றும் கந்தகச் சேர்மங்கள் இருப்பதை ஒரு சிறப்பு வேதியியல் பரிசோதனை வெளிப்படுத்தியுள்ளது. இது பூமியில் உள்ள ஆ.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ.க்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

இதனை விஞ்ஞானிகள் வியப்புடன் பார்வையிட்டு அடுத்தக்கட்ட ஆய்வை நோக்கி நகர்ந்துள்ளனர். இதன் மூலம் உயிர் வாழத் தேவையான வேதியியல் சூழல் அங்கு இருந்தது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்