ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
குவாண்டம் கம்பியூட்டிங் – கணினி உலகின் அடுத்த புரட்சி ஆன்மாவின் பயணம்: கற்பனையா? அறிவியல் சாத்தியமா? பேச்சு தாமதம் – பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை – ஒப்பிடாதீர்கள் மைக்ரோபிளாஸ்டிக்: நம் வாழ்க்கையில் மறைந்து இருக்கும் ஆபத்து வரலாற்றில் இன்று – மே 3 இன்றைய (மே 3, 2026) 12 ராசிகளுக்கான ராசிபலன் டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை

TN
TNT Admin
in உலகம்-மத்திய கிழக்கு
Sunday, 29 March, 2026 - 06:45 AM 33 Views

மத்திய கிழக்கு நாடுகளில் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் வேலை செய்வோரை விலகி இருக்கும்படி ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது. அமெரிக்கப் படையினருக்கு அருகே வசிப்பவர்களுக்கும் அத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு முழுதும் அமெரிக்கப் படையினர் தங்கியிருக்கும் இடங்கள், ஹோட்டல்களைக் குறிவைத்திருப்பதாக ஈரான் சொன்னது. ஈரானின் தொழில்சாலைப் பகுதிகளில் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தியதை அடுத்து எச்சரிக்கை வந்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தை நெருங்குகிறது. தற்காப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராய் இருப்பதாக வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) தாண்டிச் செல்ல முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்