நடுக்கடலில் மூன்று கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்: ஹோர்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

நடுக்கடலில் மூன்று கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்: ஹோர்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு

KO
Kobika
in உலகம்-மத்திய கிழக்கு
Wednesday, 22 April, 2026 - 04:44 PM 111 Views

பிரித்தானிய இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO) தெரிவித்ததின்படி, இன்று(22.04.2026) புதன்கிழமை காலை 7.55 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கப்பல் எந்தவித எச்சரிக்கையும் பெறாமல் கார்டு படகால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் UKMTO தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் இரண்டாவது கப்பல் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO) தெரிவித்துள்ளது.

பிரித்தானிய ரோயல் கடற்படை தலைமையிலான UKMTO அமைப்பு, ஈரானுக்கு மேற்கே எட்டு கடல் மைல் தொலைவில் வெளியே சென்று கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும், அது தற்போது கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

எந்த சேதமும் இல்லை என்றும், குழுவினர் "பாதுகாப்பாகவும் கணக்கில் உள்ளவர்களாகவும்" உள்ளனர் என்றும் அது கூறுகிறது. 

ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற மேலும் ஒரு சரக்கு கப்பல் தாக்கப்பட்டுள்ளதாக கடல் பாதுகாப்பு நுண்ணறிவு நிறுவனம் Vanguard தெரிவித்துள்ளது.

“MSC Francesca” எனப்படும் பனாமா கொடியுடன் இயங்கும் கப்பல், ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் ஆறு கடல் மைல் தூரத்தில் தாக்குதலுக்குள்ளானது.

ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), அந்தக் கப்பலை தொடர்புகொண்டு “நங்கூரம் போடுமாறு” உத்தரவிட்டதாகவும் Vanguard தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலால் கப்பலின் வெளிப்புற அமைப்பிலும் (hull), இருப்பிட வசதிகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதலுக்குள்ளான மூன்று கப்பல்களையும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இலக்காகக் கொண்டுள்ளது.

Fars News Agency தெரிவித்ததாவது, “Euphoria” எனப்படும் கப்பல் தாக்கப்பட்டு, தற்போது ஈரான் கடற்கரைக்கு அருகில் நிலைதடுமாறி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், “MSC Francesca” மற்றும் “Epaminondas” எனப்படும் கப்பல்கள் IRGC கடற்படையினரால் “கைப்பற்றப்பட்டு” ஈரான் கடற்கரை நோக்கி திருப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்கள், IRGC கடற்படையின் அறிக்கையை மேற்கோள் காட்டி ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்