தமிழ்நாடு & மேற்கு வங்காளத்தில் வரலாற்றிலேயே அதிக வாக்குப்பதிவு!
தமிழ்நாடு & மேற்கு வங்காளத்தில் வரலாற்றிலேயே அதிக வாக்குப்பதிவு!
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் (முதல் கட்டம்) ஆகிய மாநிலங்களில் சுதந்திரத்திற்குப் பிறகு இல்லாத அளவிற்கு அதிக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு: 84.69%
மேற்கு வங்காளம் (Phase-1): 91.78%
இது இரு மாநிலங்களிலும் இதுவரை பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவாகும்.
முன்னதாக:
தமிழ்நாடு – 78.29% (2011)
மேற்கு வங்காளம் – 84.72% (2011)
இன்று காலை 7.00 மணி முதல் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
முதன்மை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் எஸ்.எஸ். சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் நேரடி இணைய ஒளிபரப்பின் மூலம் அனைத்து வாக்குச்சாவடிகளையும் கண்காணித்தனர்.
100% வாக்குச்சாவடிகளில் நேரடி கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.
- வேட்பாளர்களின் தெளிவான வண்ண புகைப்படங்கள்
- Mobile Deposit Facility (MDF)
- புதிய Voter Information Slips (VIS)
- ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1200 வாக்காளர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு
- சக்கர நாற்காலிகள்
- தன்னார்வலர்கள்
- போக்குவரத்து வசதிகள்
மாவட்ட மற்றும் தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரங்கள் ECINET App மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கின்றன. இந்த அதிகரித்த வாக்குப்பதிவு, ஜனநாயகத்தில் மக்களின் ஈடுபாடு மற்றும் அரசியல் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
🔴 உடனடி • உண்மை • நம்பகமான செய்திகள்
👉 மேலும் புதுப்பிப்புகளுக்கு எங்களை தொடருங்கள்.
வாசகர் கருத்துக்கள்