Tamil News Today
முக்கிய செய்திகள்
அமெரிக்க முற்றுகைக்குப் பிறகு, சரக்கு ஏற்றப்பட்ட முதல் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் வளைகுடாவை விட்டு வெளியேறின என கெப்ளர் தெரிவித்தார். தமிழகத் தேர்தல்களில் ஆண்களின் ஆதிக்கமே தொடர்கிறது... ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி! பாடசாலை மாணவிகளுக்கு 2026 ஆம் ஆண்டில் வெளியான முக்கிய அறிவிப்பு வெளியானது! 2027ஆம் ஆண்டு முதல் கல்வி அமைப்பில் மாற்றம்: புதிய அறிவிப்பு வெளியீடு! இன்றைய 12 ராசிகளுக்கான ராசிபலன் (17.04.2026) இலங்கையில் தங்கியிருந்த இரான் நாட்டு மாலுமிகளில் 238 பேர் சமீபத்தில் நாடு திரும்பினர்! தொடருந்து சேவைகள் குறித்து புதிய அறிவிப்பு வெளியீடு!

ட்ரம்ப் பின்வாங்கினார் – புதிய திருப்பம்!

TN
TNT Admin
in உலகம்-அமெரிக்கா
Tuesday, 24 March, 2026 - 05:55 AM 3466 Views

"டொனால்ட் ட்ரம்ப்புடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு எதுவும் இல்லை" என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஈரானிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி, இதனை குறிப்பிட்டுள்ளது. "மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் நிலையங்களும் எங்கள் இலக்குகளில் அடங்கும் என்பதைக் கேட்ட பிறகு, ட்ரம்ப் பின்வாங்கினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்காவிட்டால், திங்கட்கிழமை மாலைக்குள் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார். இந்தநிலையில் இன்று(23) ஈரானின் மின்சார மற்றும் எரிசக்தி நிலையங்களை இலக்காகக் கொண்ட இராணுவ தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்