மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கல் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
இலங்கை பொலிஸிற்கு இந்தியாவின் அன்பளிப்பு – 134 கெப் வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை – கியூபா நட்புறவை வலுப்படுத்த கலந்துரையாடல் திருகோணமலையில் 4 எண்ணெய் தாங்கிகள் புனரமைப்பு – 2 தாங்கிகள் பணிகள் நிறைவு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி முல்லைத்தீவில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வானிலை எச்சரிக்கை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை இன்றைய ராசிபலன் @ 19 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை

மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கல்

KO
Kobika
in இலங்கை
Tuesday, 05 May, 2026 - 09:01 PM 49 Views

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல், விமானக் கட்டண உயர்வு மற்றும் பருவகால மாற்றங்கள் காரணமாக இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இயக்கப்படும் தனியார் சொகுசு வாடகை வாகன சேவைகள், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

இந்த நிலை தொடர்ந்தால் ஊழியர்கள் பணி நீக்கம் மற்றும் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்படும் என வாடகை வாகன உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒவ்வொரு வாடகை வாகன நிறுவனமும் குறைந்தது 12 வாகனங்களையும், அவற்றுக்கான பிரத்யேக கவுண்டர் ஊழியர்களையும் பராமரிக்க வேண்டியுள்ளது.

ஆனால், வருமானம் இல்லாத இந்த இக்கட்டான காலத்திலும் விமான நிலைய அதிகாரிகளுக்கு மாத வாடகையாக 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த வேண்டியிருப்பது தங்களுக்குப் பெரும் சுமையாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

விமான நிலைய வளாகத்திற்குள் இயங்கும் மீட்டர் வாடகை சேவைகளுக்குக் குறைந்த வாடகை மற்றும் விளம்பரக் கட்டணங்களை அதிகாரிகள் விதிப்பதால், சந்தையில் நியாயமற்ற போட்டி நிலவுவதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்