விஜய்யின் சொத்துக்கள் குறித்து விசாரணை கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: டிவிகே தலைவர் நடிகர் விஜய்யின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனுவில், விஜய்யின் வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டு மனுவை நிராகரித்தது.
மேலும், உறுதியான ஆதாரங்களின்றி பொதுமக்கள் அல்லது பிரபலங்களை எதிர்த்து இவ்வாறான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்துக்கள்