அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு - கொலையா தற்கொலையா என பொலிசார் தீவிர விசாரணை! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
நல்லூர் ஆலயம் – வரலாற்றையும் பண்பாட்டையும் சுமக்கும் ஆன்மீகப் பொக்கிஷம் பக்கங்களுக்குள் மறைந்திருக்கும் வாழ்க்கை உண்மைகள் விளையாட்டு நேரம்: குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கான திறவுகோல் கோபத்தை சக்தியாக மாற்ற முடியுமா? வெற்றியாளர்களின் தினசரி நடத்தைகள் – வெற்றியின் ரகசியம் என்ன? அதிகாலையில் எழுவதற்கு சூப்பர் டிப்ஸ் – உங்கள் நாளை வெற்றிகரமாக தொடங்குங்கள்! விண்வெளி சுற்றுலா: கனவா, நிஜமா? கடல்நீரை குடிநீராக மாற்றும் புதிய தொழில்நுட்பங்கள்

அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு - கொலையா தற்கொலையா என பொலிசார் தீவிர விசாரணை!

PI
piragash
in இலங்கை
Tuesday, 14 April, 2026 - 06:34 PM 138 Views

வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.

சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஒருவரது எலும்புக் கூடே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கும் ஊர்காவற்றுறை பொலிசார் குறித்த எலும்புக் கூடுகள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ உடற்கூற்று பின்னரே  உறுதியாக கூறமுடியும் என்றும் தெரிவித்தனர்.

முன்பதாக குறித்த பகுதி ஒன்றின் பற்றைக் காணி ஒன்றில் எலும்புக் கூடுகள் இருப்பதாக பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு பொதுமகன் ஒருவரால் தகவல் வழங்கப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் குறித்த எலும்புக் கூடுகளை அடையாளம் கண்டதாகவும், இதனடிப்படையில் குறித்த எலும்புக்கூட்டை பொலிசார், நீதிபதி, மரணவிசாரணை அதிகாரி மற்றும் கிராமசேவகர் உள்ளிட்ட பலரது முன்னிலையில் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவ மனைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் குறித்த எலும்புக் கூடு எரிந்த நிலையில் தோற்றமளிப்பதாக இருப்பதாகவும் சந்தேகிக்கப்படும் நிலையில் குறித்த விடையம் அப்பகுதிய பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்