செம்மணி புதைகுழி அகழ்வில் என்பு கூட்டு தொகுதி கண்டுபிடிப்பு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
குவாண்டம் கம்பியூட்டிங் – கணினி உலகின் அடுத்த புரட்சி ஆன்மாவின் பயணம்: கற்பனையா? அறிவியல் சாத்தியமா? பேச்சு தாமதம் – பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை – ஒப்பிடாதீர்கள் மைக்ரோபிளாஸ்டிக்: நம் வாழ்க்கையில் மறைந்து இருக்கும் ஆபத்து வரலாற்றில் இன்று – மே 3 இன்றைய (மே 3, 2026) 12 ராசிகளுக்கான ராசிபலன் டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

செம்மணி புதைகுழி அகழ்வில் என்பு கூட்டு தொகுதி கண்டுபிடிப்பு

PI
piragash
in இலங்கை
Wednesday, 29 April, 2026 - 07:12 PM 24 Views

யாழ்ப்பாணம், ஏப்ரல் 28 – செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் புதைகுழி அகழ்வு பணிகளின் போது, என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ஞா. ரனீத்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, கண்டுபிடிக்கப்பட்ட என்பு தொகுதியை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதனை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த அகழ்வு பணிகள் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் நடைபெற்று வருவதுடன், மனித உரிமை அமைப்புகள் மற்றும் விசாரணை அதிகாரிகளின் கவனத்திலும் இந்த நடவடிக்கைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கண்டுபிடிக்கப்படும் எச்சங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக DNA பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்