நிதி அமைச்சக இணையத் திருட்டு வழக்கு ஏழு அதிகாரிகளிடம் சிஐடி விசாரணை | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23, 2026) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு சரியாகத் தொடங்க உள்ளது. ஈரானின் உள்கட்டமைப்புக்கு டிரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் திரும்புகின்றனர். கப்பல்களுடன் நீர்நிலைகளின் மீது பறக்கும் ஹெலிகாப்டர்கள். சுருக்கம் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ

நிதி அமைச்சக இணையத் திருட்டு வழக்கு ஏழு அதிகாரிகளிடம் சிஐடி விசாரணை

PI
piragash
in இலங்கை
Sunday, 26 April, 2026 - 02:08 PM 32 Views

நிதி அமைச்சகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இணையவழி திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து, குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) ஏழு அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் எவ்வாறு நடைபெற்றது, இதில் உள்ளக தொடர்புகள் உள்ளதா என்பன உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய தொழில்நுட்ப தகவல்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்த இணையத் திருட்டு சம்பவம் நாட்டின் நிதி பாதுகாப்பு குறித்து கடும் கவலைகளை எழுப்பியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்