நிதி அமைச்சக இணையத் திருட்டு வழக்கு ஏழு அதிகாரிகளிடம் சிஐடி விசாரணை
நிதி அமைச்சகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இணையவழி திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து, குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) ஏழு அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் எவ்வாறு நடைபெற்றது, இதில் உள்ளக தொடர்புகள் உள்ளதா என்பன உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய தொழில்நுட்ப தகவல்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்த இணையத் திருட்டு சம்பவம் நாட்டின் நிதி பாதுகாப்பு குறித்து கடும் கவலைகளை எழுப்பியுள்ளது.
வாசகர் கருத்துக்கள்