மத்திய வங்கியின் புதிய நடவடிக்கை: 142 மில்லியன் பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்து வெளியேற்றம் | இலங்கை
முக்கிய செய்திகள்
ஈரானின் உள்கட்டமைப்புக்கு டிரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் திரும்புகின்றனர். கப்பல்களுடன் நீர்நிலைகளின் மீது பறக்கும் ஹெலிகாப்டர்கள். சுருக்கம் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ

மத்திய வங்கியின் புதிய நடவடிக்கை: 142 மில்லியன் பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்து வெளியேற்றம்

KO
Kobika
in இலங்கை
Wednesday, 22 April, 2026 - 06:16 PM 28 Views

கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 142 மில்லியன் பணத் தாள்களை புழக்கத்தில் இருந்து மத்திய வங்கி நீக்கியுள்ளது.

இவ்வாறு நீக்கப்பட்ட 141.55 மில்லியன் பணத் தாள்களின் மொத்த மதிப்பு 91.23 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற, சிதைந்த மற்றும்அழுக்கடைந்த   பணத்தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகளைத் தொடர்ந்து புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

அவற்றுக்கு பதிலாக புதிய பணத்தை விநியோகிக்கும் முறையான பணியை மத்திய வங்கி மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, கள்ள பணத்தாள்களின் புழக்கத்தைத் தடுக்கும் நோக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நோட்டுக்கள் பிரிவுடன் இணைந்து மத்திய வங்கி செயற்பட்டு வருகிறது.

கடந்தாண்டில் போலி நாணயத்தாள்களை நீதிமன்றத்தில் ஆதாரங்களாக சமர்ப்பிப்பதற்கான 83 சான்றிதழ்களை மத்திய வங்கி வழங்கியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்