மத்திய வங்கியின் புதிய நடவடிக்கை: 142 மில்லியன் பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்து வெளியேற்றம் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

மத்திய வங்கியின் புதிய நடவடிக்கை: 142 மில்லியன் பணத்தாள்கள் புழக்கத்தில் இருந்து வெளியேற்றம்

KO
Kobika
in இலங்கை
Wednesday, 22 April, 2026 - 06:16 PM 116 Views

கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 142 மில்லியன் பணத் தாள்களை புழக்கத்தில் இருந்து மத்திய வங்கி நீக்கியுள்ளது.

இவ்வாறு நீக்கப்பட்ட 141.55 மில்லியன் பணத் தாள்களின் மொத்த மதிப்பு 91.23 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற, சிதைந்த மற்றும்அழுக்கடைந்த   பணத்தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகளைத் தொடர்ந்து புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

அவற்றுக்கு பதிலாக புதிய பணத்தை விநியோகிக்கும் முறையான பணியை மத்திய வங்கி மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, கள்ள பணத்தாள்களின் புழக்கத்தைத் தடுக்கும் நோக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நோட்டுக்கள் பிரிவுடன் இணைந்து மத்திய வங்கி செயற்பட்டு வருகிறது.

கடந்தாண்டில் போலி நாணயத்தாள்களை நீதிமன்றத்தில் ஆதாரங்களாக சமர்ப்பிப்பதற்கான 83 சான்றிதழ்களை மத்திய வங்கி வழங்கியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்