ட்ரம்ப் பின்வாங்கினார் – புதிய திருப்பம்! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத டி20 போட்டியில் டெல்லி வெற்றி ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெய்ஜிங்கில் சொர்க்கக் கோயிலுக்கு சென்ற ஷி ஜின்பிங் – டிரம்ப் சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 மே 2026 தாய்லாந்து அரசியலில் அதிரடி மாற்றம்: சிறையிலிருந்து விடுதலையானார் தக்சிண் ஷினாவத்ரா! இன்றைய ராசிபலன் – மே 10, 2026 ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வாக்குமூலம்!

ட்ரம்ப் பின்வாங்கினார் – புதிய திருப்பம்!

TN
TNT Admin
in உலகம்-அமெரிக்கா
Tuesday, 24 March, 2026 - 05:55 AM 3508 Views

"டொனால்ட் ட்ரம்ப்புடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு எதுவும் இல்லை" என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஈரானிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி, இதனை குறிப்பிட்டுள்ளது. "மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் நிலையங்களும் எங்கள் இலக்குகளில் அடங்கும் என்பதைக் கேட்ட பிறகு, ட்ரம்ப் பின்வாங்கினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்காவிட்டால், திங்கட்கிழமை மாலைக்குள் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார். இந்தநிலையில் இன்று(23) ஈரானின் மின்சார மற்றும் எரிசக்தி நிலையங்களை இலக்காகக் கொண்ட இராணுவ தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்