கப்பலில் கண்டறியப்பட்ட ஹண்டா வைரஸ் – புதிய பெருந்தொற்றுக்கு அறிகுறியா?
ஹண்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட, கவலைக்கிடமான நிலையில் உள்ள இருவர் சிகிச்சைக்காக நெதர்லாந்து சென்றடைந்துள்ளதாக கப்பல் நிறுவனமான ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு கூட்ட நாடான கேப் வெர்டே அருகே மூன்று நாட்களாக நங்கூரமிட்டிருந்த எம்.வி ஹோண்டியஸ் கப்பல், தற்போது ஸ்பெயினின் கனாரி தீவுகளை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த தலா ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்ததை அடுத்து அவர்கள் மூவரும் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களில் 65 வயதுடைய ஜெர்மன் நாட்டு நபர், மே 2-ஆம் தேதி கப்பலில் உயிரிழந்த ஜெர்மன் பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு அர்ஜென்டினாவிலிருந்து கப்பல் புறப்பட்டதில் இருந்து அதில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், கப்பலில் இருந்து இறங்கி சுவிட்சர்லாந்து திரும்பிய ஒரு நபருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்துக்கள்