கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்!
வியட்நாம் ஜனாதிபதி Tô Lâm அவர்களின் உத்தியோகபூர்வ Cவிஜயத்தை முன்னிட்டு, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனாதிபதியின் பயணத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக பல முக்கிய வீதிகளில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுலாகும் பகுதிகள்:
▪️ கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை
▪️ கிராண்ட்பாஸ்
▪️ ஒருகொடவத்த
▪️ பேச்லைன் வீதி
▪️ பொரளை
▪️ ஹார்டன் பிளேஸ்
▪️ லிபர்டி சுற்றுவட்டம்
▪️ காலி வீதி
▪️ காலி முகத்திடல்
▪️ லோட்டஸ் வீதி
▪️ யோர்க் வீதி உள்ளிட்ட பகுதிகள்
மேலும், ஜனாதிபதியின் பயண நேரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
VIP வாகன அணிவகுப்பு நகரும் நேரங்களில் மற்ற வாகனங்களுக்கும் தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வியட்நாம் ஜனாதிபதி Tô Lâm அவர்கள் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன், பல உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.
தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, போக்குவரத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள்