சென்னை சுழலில் மும்பை இந்தியன்ஸ் தடுமாறியது | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாத டி20 போட்டியில் டெல்லி வெற்றி ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெய்ஜிங்கில் சொர்க்கக் கோயிலுக்கு சென்ற ஷி ஜின்பிங் – டிரம்ப் சுற்றுலா அதிகாரசபை அதிரடி: மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமையும் பூங்காவில் பலவீனமான கட்டுமானம். மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 மே 2026 தாய்லாந்து அரசியலில் அதிரடி மாற்றம்: சிறையிலிருந்து விடுதலையானார் தக்சிண் ஷினாவத்ரா! இன்றைய ராசிபலன் – மே 10, 2026 ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் உதய கம்மன்பில வாக்குமூலம்!

சென்னை சுழலில் மும்பை இந்தியன்ஸ் தடுமாறியது

KO
Kobika
in விளையாட்டு
Friday, 24 April, 2026 - 01:56 AM 46 Views

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் 33ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மும்பையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சஞ்சு சம்சன் 101 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 208 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன் அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும், நூர் அஹமட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

குறித்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பிட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்