பாதுகாப்பு வலையமைப்புடன் நீதிமன்றத்தில் தோன்றிய சுரேஷ் சாலே | TamilNewsToday
முக்கிய செய்திகள்
மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை -புத்தக விமர்சனம் சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம்: பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள்

பாதுகாப்பு வலையமைப்புடன் நீதிமன்றத்தில் தோன்றிய சுரேஷ் சாலே

KO
Kobika
in இலங்கை
Wednesday, 22 April, 2026 - 04:14 PM 73 Views

அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு வழக்கில், சுரேஷ் சாலேவை மூன்றாவது சந்தேக நபராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பெயரிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே மற்றும் மேலும் இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

சந்தேகநபரான சுரேஷ் சாலே தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், நீதித்துறை நடவடிக்கைகளுக்காக அவரை திறந்த நீதிமன்றத்தின் முன் முன்னிலைபடுத்தப்பட வேண்டும் என்று கொழும்பு கோட்டை நீதவான் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றத்தின் முன் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.  

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்