பாடசாலை மாணவிகளுக்கு 2026 ஆம் ஆண்டில் வெளியான முக்கிய அறிவிப்பு வெளியானது! | TamilNewsToday
முக்கிய செய்திகள்
மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை -புத்தக விமர்சனம் சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம்: பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள்

பாடசாலை மாணவிகளுக்கு 2026 ஆம் ஆண்டில் வெளியான முக்கிய அறிவிப்பு வெளியானது!

KO
Kobika
in இலங்கை
Friday, 17 April, 2026 - 11:00 AM 139 Views

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாடசாலை மாணவிகளின் தொடர் கல்வியை உறுதி செய்யும் நோக்கில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரச உதவி பெறும் விசேட பாடசாலைகளில் தரம் 6 இற்கு மேல் கல்வி பயிலும் சுமார் 1.05 மில்லியன் (10 இலட்சத்து 50 ஆயிரம்) மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ளனர். 

இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவிக்கு தலா 1,440/- ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படும் எனவும் தலா 720/- ரூபா பெறுமதியான இரண்டு வவுச்சர்கள் ஒவ்வொரு மாணவிக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதனடிப்படையில், தலா 120/- ரூபா பெறுமதியான 08 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட 12 பக்கெட்டுகள், அல்லது, தலா 180/- ரூபா பெறுமதியான 10 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட 08 பொதிகளை பெறும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரார் சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்