தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் - Tamil News Today
முக்கிய செய்திகள்
10 ரூபாய் நோட்டுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்த ‘நாம் தமிழர்’ கட்சி வேட்பாளர் ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகள் 18 வயதுக்குக்கீழ் உள்ளோரைப் பாதுகாக்க! காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள்! இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம் ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை பரிஸ்: அமெரிக்க வங்கியை குறிவைத்த குண்டுத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது!! ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு தலையெழுத்தையே மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த முருகன் பாடல் தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் இந்தியாவில் பதிவான நில நடுக்கம்.
ADVERTISEMENT 728 x 90 Banner Place

தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நிர்வாகி Monday, 23 March, 2026
தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தலவாக்கலை ராணிவத்தை வீதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகள் உரிய தூரம் வரை சேவையில் ஈடுபடுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று(23) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் போராட்டகாரர்கள் ராணிவத்தை பகுதியிலிருந்து சுமார் 3 கிலோ மீற்றருக்கும் தூரம் எதிர்ப்பு ஊர்வலமாக சென்று கோசங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை காட்சிபடுத்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இலங்கையிலும் சட்டென சரிவு
தொடர்புடைய செய்தி
உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இலங்கையிலும் சட்டென சரிவு

கவனயீர்ப்பு போராட்டம்

தலவாக்கலையிலிருந்து ராணிவத்தை தோட்டத்திற்கு கடந்த காலங்களில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் ராணிவத்தை வரை சென்றுளள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் வீதிக்கு மண் போடப்பட்டமையினால் பேருந்துகள் செல்வது கடினமானதாக அமைந்ததாகவும் அந்த கால்பகுதியிலிருந்து பம்பரகலை வரை மாத்திரம்பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளது.

தலவாக்கலையில் உரிய தூரம் வரை பேருந்து பயணிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

இப்போது வீதி புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த வீதியூடான போக்குவரத்து பம்பரகலை தொழிற்சாலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் சின்ன ராணிவத்தை, பெரிய ராணிவத்தை, மெல்டன் ஆகிய தோட்டங்களில் உள்ள மக்கள் தமது அன்றாட தேவையினை நிறைவேற்றிக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பம்பரகலை தொழிற்சாலைக்கு அருகாமையில் நிறுத்தப்படும் பேருந்தினை ராணிவத்தை வரை சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்