வாக்குச்சாவடிக்குள் நுழைந்த காட்டு யானை: அச்சத்தில் ஓடிய மக்கள் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

வாக்குச்சாவடிக்குள் நுழைந்த காட்டு யானை: அச்சத்தில் ஓடிய மக்கள்

KO
Kobika
in தமிழ்நாடு
Thursday, 23 April, 2026 - 05:50 PM 106 Views

இந்தியாவின் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டமன்ற வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் காட்டு யானை புகுந்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கிராம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருந்துள்ளனர். 

அப்போது திடீரென அருகிலிருந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று வாக்குச்சாவடி வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. யானையைக் கண்டதும் வரிசையில் நின்ற வாக்காளர்கள் அச்சமடைந்து நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். 

இதனால் அந்த மையத்தில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நிலைமை சீரானதைத் தொடர்ந்து, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியுள்ளது. 

இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த சட்டமன்ற தேர்தல் சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்