உயர்தர மாணவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
Thursday, 23 April, 2026 - 10:59 PM 40 Views
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை(24.4.2026) நள்ளிரவுக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நிகழ்நிலை ஊடாக விண்ணப்பிக்க முடியாது என்பதுடன் , விண்ணப்பங்களை ஏற்கும் காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள்