மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கல் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
AI முதலீடுகள் உலக பொருளாதாரத்தை எப்படி மாற்றுகின்றன? 2026 உலக வணிக உலகின் முக்கிய போக்குகள் உலக வர்த்தகத்தின் எதிர்காலம்: அரசியல் பதற்றங்களையும் மீறி வளருமா? கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அதிசயங்கள் சூரிய ஆற்றல்: எதிர்காலத்தின் தூய்மையான சக்தி சித்த மருத்துவம் – தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறை சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம்

மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கல்

KO
Kobika
in இலங்கை
Tuesday, 05 May, 2026 - 09:01 PM 59 Views

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல், விமானக் கட்டண உயர்வு மற்றும் பருவகால மாற்றங்கள் காரணமாக இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இயக்கப்படும் தனியார் சொகுசு வாடகை வாகன சேவைகள், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

இந்த நிலை தொடர்ந்தால் ஊழியர்கள் பணி நீக்கம் மற்றும் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்படும் என வாடகை வாகன உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒவ்வொரு வாடகை வாகன நிறுவனமும் குறைந்தது 12 வாகனங்களையும், அவற்றுக்கான பிரத்யேக கவுண்டர் ஊழியர்களையும் பராமரிக்க வேண்டியுள்ளது.

ஆனால், வருமானம் இல்லாத இந்த இக்கட்டான காலத்திலும் விமான நிலைய அதிகாரிகளுக்கு மாத வாடகையாக 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த வேண்டியிருப்பது தங்களுக்குப் பெரும் சுமையாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

விமான நிலைய வளாகத்திற்குள் இயங்கும் மீட்டர் வாடகை சேவைகளுக்குக் குறைந்த வாடகை மற்றும் விளம்பரக் கட்டணங்களை அதிகாரிகள் விதிப்பதால், சந்தையில் நியாயமற்ற போட்டி நிலவுவதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்