தற்போது நிலவும் கடும் வெப்பிலை குறித்து வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் எச்சரிக்கை விடுத்துள்ளது. | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

தற்போது நிலவும் கடும் வெப்பிலை குறித்து வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் எச்சரிக்கை விடுத்துள்ளது.

KO
Kobika
in இலங்கை
Monday, 20 April, 2026 - 08:04 PM 93 Views

தற்போது நிலவும் கடும் வெப்பிலை குறித்து பல மாகாணங்களில் வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, இன்று(20.04.2026) பிற்பகல் 03.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) வரை செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தின் சில பகுதிகளில், மனித உடலில் உணரப்படும் வெப்பம் கவனம் தேவைப்படும் அளவில் நீடிக்கக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில், பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு, மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.  

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்