போதைப்பொருள் பணம் தராததால் தாயின் கால்களை உடைத்த மகன்
கேகாலை, ஏப்ரல் 28 – போதைப்பொருள் வாங்குவதற்காக பணம் வழங்காததால் தனது தாயை கடுமையாக தாக்கிய சம்பவம் கேகாலை – தேவலகம பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் 20 வயது இளைஞன், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது தாயிடம் 5,000 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால், தாய் அதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து, கோபமடைந்த இளைஞன் தனது தாயை தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில், தாயின் கால்கள் முறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையாக காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்திற்குப் பின்னர் குறித்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயரமான சம்பவம், போதைப்பொருள் பழக்கத்தின் ஆபத்துகளை மீண்டும் வெளிப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
வாசகர் கருத்துக்கள்