ஆறு மணி நேர எச்சரிக்கை தொடர்ச்சி: கடலில் அமெரிக்காவின் அதிரடி – காணொளி வெளியீடு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
சுத்தமான இலங்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகளை முப்படையினர் முன்னெடுத்தனர் சமுர்த்திக் கொடி வாரம் ஆரம்பம் விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் குறித்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் முதல் 1000 நாட்கள்: குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொற்காலம் வரலாற்றில் இன்று – ஜூன் 1 குழந்தை பருவ அதிக உடல் பருமன் (Childhood Obesity) – காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் (Postpartum Depression) – விளக்கம் ,காரணங்கள் மற்றும் தீர்வுகள்

ஆறு மணி நேர எச்சரிக்கை தொடர்ச்சி: கடலில் அமெரிக்காவின் அதிரடி – காணொளி வெளியீடு

KO
Kobika
in உலகம்-அமெரிக்கா
Monday, 20 April, 2026 - 12:33 PM 93 Views

அமெரிக்க கடற்படை, ஓமான் வளைகுடாவில் ஈரான் கொடியுடன் பயணம் செய்த சரக்கு கப்பல் ஒன்றை துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்து, பின்னர் அதில் ஏறி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்தநிலையில், சென்ட்காம் இந்த நடவடிக்கையின் காணொளியையும் பகிர்ந்துள்ளது.

அதில் ஈரானியக் கப்பலான டூஸ்காவை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் அதனை நிறுத்துமாறு எச்சரிப்பதைக் காணலாம்.

ஹோர்மூஸ் கடலிணை அருகே அமெரிக்கா விதித்த தடைக்கு உட்பட்ட நிலையில், இது முதல் முறையாக கப்பல் கைப்பற்றப்பட்ட சம்பவமாகும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட "Touska” எனப்படும் கப்பல் எச்சரிக்கைகளை பின்பற்றாததால் அது கைப்பற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஈரான், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும், “ஆயுதக் கடற்கொள்ளை” என்றும் குற்றம் சாட்டி, விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

மேலும், இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாவது சுற்று சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுத்துள்ளது.

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்