வதைமுகாமில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பேராசிரியர் விசாரணையில் வெளிவந்த திருப்பம்!
CID விசாரணையில்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் போனது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானை சட்டமா அதிபரின் அறிவுரை வரும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் பாசன் அமரசேன உத்தரவிட்டார்.
2006-ஆம் ஆண்டு நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தக் காணாமல் போதல் தொடர்பாக, காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக இதுவரை ஐந்து சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இவ்வழக்கில் பிள்ளையானை முதல் சந்தேக நபராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (02) வெளியிட்ட ஒரு மேலதிக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு காணாமல் போன பேராசிரியர் ரவீந்திரநாத் வழக்கு, பல ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளது.
பிள்ளையான் கைது செய்யப்பட்டிருப்பது, இந்த வழக்கை முக்கிய தேசிய மட்ட விசாரணையாக மாற்றியுள்ளது.
மேலும் தகவல்கள் வெளியாகும் நிலையில், இந்த வழக்கு எதிர்காலத்தில் பெரும் அரசியல் மற்றும் சட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்
வாசகர் கருத்துக்கள்