இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை
இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக Department of Meteorology Sri Lanka தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை, பருவமழை காலத்தில் பலத்த காற்று, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்களும் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும், அவசர தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள்