யாழ்ப்பாணம் : புங்குடுதீவு வாணர் பாலத்தில் வாகன விபத்தில் இளைஞன் பலி !
புங்குடுதீவு வாணர் பாலத்தில் ( மடத்துவெளி கடற்படை முகாம் அருகில் ) ஜெட்விங் ஹோட்டல் நிறுவனத்திற்குரிய பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி வாகன விபத்து.
வீதியின் வளைவருகே கட்டப்பட்டுள்ள மதில் வீதிக்கான ஒதுக்கீட்டு பகுதியையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது போலுள்ளது. இதனால் எதிரே வரும் வாகனத்தினை அவதானிக்க முடியாத நிலை ஏற்பட்டு இளைஞன் விபத்தை எதிர் நோக்கியிருக்கலாம். மேலும் குறித்த வீதி குறுகலான வீதியாக காணப்படுவதாகவும் மற்றும் சிறந்த முறையில் அமைக்கப்படவில்லை என்றும் மக்கள் விசனம் தெரிவித்தனர் . வீதிக்குரிய திணைக்களங்களின் ஒதுக்கீட்டுப் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மதில்களை சட்ட ரீதியாக அகற்றுவதன் மூலம் இவ்வாறான விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.
வாசகர் கருத்துக்கள்