ஐபிஎல் 2026: தமிழக கிரிக்கெட் ஜாம்பவான் மறைவையொட்டி சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். | TamilNewsToday
முக்கிய செய்திகள்
நல்லூர் ஆலயம் – வரலாற்றையும் பண்பாட்டையும் சுமக்கும் ஆன்மீகப் பொக்கிஷம் பக்கங்களுக்குள் மறைந்திருக்கும் வாழ்க்கை உண்மைகள் விளையாட்டு நேரம்: குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கான திறவுகோல் கோபத்தை சக்தியாக மாற்ற முடியுமா? வெற்றியாளர்களின் தினசரி நடத்தைகள் – வெற்றியின் ரகசியம் என்ன? அதிகாலையில் எழுவதற்கு சூப்பர் டிப்ஸ் – உங்கள் நாளை வெற்றிகரமாக தொடங்குங்கள்! விண்வெளி சுற்றுலா: கனவா, நிஜமா? கடல்நீரை குடிநீராக மாற்றும் புதிய தொழில்நுட்பங்கள்

ஐபிஎல் 2026: தமிழக கிரிக்கெட் ஜாம்பவான் மறைவையொட்டி சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

KO
Kobika
in விளையாட்டு
Tuesday, 14 April, 2026 - 11:03 PM 78 Views

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சி.டி. கோபிநாத் சமீபத்தில் காலமானார். அவர் அப்போதைய மெட்ராஸ் அணியில் இடம் பெற்று ஆடியவர். 

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதிய போட்டி தொடங்கிய போது இரு அணி வீரர்களும் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்து களம் இறங்கினர். 

1951 முதல் 1960 வரை இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோபிநாத், 1952-ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் முக்கிய பங்கு வகித்தவர்.

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்