ஐபிஎல் 2026: தமிழக கிரிக்கெட் ஜாம்பவான் மறைவையொட்டி சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். | TamilNewsToday
முக்கிய செய்திகள்
குவாண்டம் கம்பியூட்டிங் – கணினி உலகின் அடுத்த புரட்சி ஆன்மாவின் பயணம்: கற்பனையா? அறிவியல் சாத்தியமா? பேச்சு தாமதம் – பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை – ஒப்பிடாதீர்கள் மைக்ரோபிளாஸ்டிக்: நம் வாழ்க்கையில் மறைந்து இருக்கும் ஆபத்து வரலாற்றில் இன்று – மே 3 இன்றைய (மே 3, 2026) 12 ராசிகளுக்கான ராசிபலன் டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

ஐபிஎல் 2026: தமிழக கிரிக்கெட் ஜாம்பவான் மறைவையொட்டி சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

KO
Kobika
in விளையாட்டு
Tuesday, 14 April, 2026 - 11:03 PM 37 Views

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சி.டி. கோபிநாத் சமீபத்தில் காலமானார். அவர் அப்போதைய மெட்ராஸ் அணியில் இடம் பெற்று ஆடியவர். 

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதிய போட்டி தொடங்கிய போது இரு அணி வீரர்களும் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்து களம் இறங்கினர். 

1951 முதல் 1960 வரை இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோபிநாத், 1952-ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் முக்கிய பங்கு வகித்தவர்.

 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்