கொழும்பை வந்தடைந்த ஐஎன்எஸ் நிரிஷெக் கடற்படை கப்பல்
Tuesday, 21 April, 2026 - 10:50 PM 34 Views
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் நிரிஷெக் போர்க்கப்பல்‘INS NIREEKSHAK’ இன்று (21) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக கெமாண்டர் சைலேஸ் குமார் தியாகி கடமையாற்றுகின்றார்.
போர்க்கப்பல் நாட்டின் தங்கியிருக்கு காலப்பகுதியில் போது, அதன் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து கலப்பு வாயு மூழ்குதல் பயிற்சித்திட்டத்தினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள்