இன்று முதல் 18 ஆம் திகதி வரை பெற்றோலுக்கான QR முறை நீக்கப்படும் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
குவாண்டம் கம்பியூட்டிங் – கணினி உலகின் அடுத்த புரட்சி ஆன்மாவின் பயணம்: கற்பனையா? அறிவியல் சாத்தியமா? பேச்சு தாமதம் – பெற்றோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை – ஒப்பிடாதீர்கள் மைக்ரோபிளாஸ்டிக்: நம் வாழ்க்கையில் மறைந்து இருக்கும் ஆபத்து வரலாற்றில் இன்று – மே 3 இன்றைய (மே 3, 2026) 12 ராசிகளுக்கான ராசிபலன் டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

இன்று முதல் 18 ஆம் திகதி வரை பெற்றோலுக்கான QR முறை நீக்கப்படும்

PI
piragash
in இலங்கை
Sunday, 12 April, 2026 - 04:10 PM 37 Views

இன்று முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு இருந்த QR முறை நீக்கப்பட்டுள்ளது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இந்த வகையில், பெட்ரோலுக்கு மாத்திரமே QR முறை நீக்கப்பட்டள்ளது. அத்துடன், ஒற்றை, இரட்டை முறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். பெட்ரேலுக்கான QR முறையும் நீக்கப்பட்டு, ஒற்றை, இரட்டை முறையும் நீக்கப்படுமிடத்து, முன்பிருந்தது போல் பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் அதிகரிக்க நேரிடும். இதனால் பொதுமக்கள்தான் அசெளகரியங்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த புத்தாண்டு காலத்தில் எரிபொருட்களின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்ட மாட்டாது என்று உறுதியளிப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் , ஒரு லீற்றர் ஒட்டோ டீசலுக்கு 100/- ரூபாயும், ஒரு லீற்றர் ஒக்டேன் 92 வகுதி பெற்றோலுக்கு 20/- ரூபாயும் என்ற வகையில் எரிபொருள் இறக்குமதி விநியோகத்தர்களுக்கு செலுத்துவதன் மூலம் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி, பொது மக்களுக்கு சலுகையினை வழங்கி வருகிறது.

மேலும், எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருட்களின் விலையை பொறுத்தே, எதிர்கால தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்