எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடியின் பதவி குறித்து வெளியிடப்பட்ட தகவல்
வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கடந்த வெள்ளிக்கிழமை (17) பதவி விலகியதையடுத்து அது வெற்றிடமாகவே உள்ளது.
ஆனால் பதவி விலகிய செயலாளரின் வெற்றிடத்திற்கு ஜே.எம்.ஆர்.டி. அபோன்சு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி செயலகத்தில் மேலதிக செயலாளராக பணியாற்றியவர்.
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் தாம் பதவி விலகுவதாக அமைச்சர் குமார ஜயக்கொடி ஜனாதிபதிக்கு அனுப்பிய பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் ஒருவரிடமே வலுசக்தி அமைச்சின் பொறுப்பை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.
வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்காமல் அமைச்சரவையில் உள்ள ஒருவருக்கே அந்தப் பொறுப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
வாசகர் கருத்துக்கள்