எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடியின் பதவி குறித்து வெளியிடப்பட்ட தகவல் | இலங்கை
முக்கிய செய்திகள்
ஈரானின் உள்கட்டமைப்புக்கு டிரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் திரும்புகின்றனர். கப்பல்களுடன் நீர்நிலைகளின் மீது பறக்கும் ஹெலிகாப்டர்கள். சுருக்கம் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடியின் பதவி குறித்து வெளியிடப்பட்ட தகவல்

KO
Kobika
in இலங்கை
Monday, 20 April, 2026 - 09:02 AM 33 Views

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கடந்த வெள்ளிக்கிழமை (17) பதவி விலகியதையடுத்து அது வெற்றிடமாகவே உள்ளது.

ஆனால் பதவி விலகிய செயலாளரின் வெற்றிடத்திற்கு ஜே.எம்.ஆர்.டி. அபோன்சு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி செயலகத்தில் மேலதிக செயலாளராக பணியாற்றியவர்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் தாம் பதவி விலகுவதாக அமைச்சர் குமார ஜயக்கொடி ஜனாதிபதிக்கு அனுப்பிய பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் ஒருவரிடமே வலுசக்தி அமைச்சின் பொறுப்பை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.

வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்காமல் அமைச்சரவையில் உள்ள ஒருவருக்கே அந்தப் பொறுப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
 

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்