கைத்துப்பாக்கி மிரட்டல் குற்றச்சாட்டு: எம்.பி. அருச்சுனா இராமநாதன் பிணையில் விடுவிப்பு
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன், பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை தொடர்புடைய வழக்கை பரிசீலித்த நீதிபதி, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
பிணை நிபந்தனைகளில், விசாரணைக்கு தேவையான போது நீதிமன்றில் ஆஜராகுதல், விசாரணைகளில் ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
வாசகர் கருத்துக்கள்