தமிழகத்தில் இன்று தேர்தல்: இலங்கையிலும் உயரும் எதிர்பார்ப்பு | தமிழ்நாடு
முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23, 2026) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு சரியாகத் தொடங்க உள்ளது. ஈரானின் உள்கட்டமைப்புக்கு டிரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் திரும்புகின்றனர். கப்பல்களுடன் நீர்நிலைகளின் மீது பறக்கும் ஹெலிகாப்டர்கள். சுருக்கம் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ

தமிழகத்தில் இன்று தேர்தல்: இலங்கையிலும் உயரும் எதிர்பார்ப்பு

KO
Kobika
in தமிழ்நாடு
Thursday, 23 April, 2026 - 08:13 AM 4 Views

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு இன்று(23.04.2026) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி தமிழகத்திலுள்ள மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனா்.

இதில், 14 இலட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக உள்ளனர்.

மாநிலம் முழுவதும் 75,064 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தமிழக பேரவைத் தோ்தலில் திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் திகதி கடந்த மாா்ச் 15இல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை(ஏப். 20) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்