நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின்சார நுகர்வோரிடமிருந்து அறவிட வேண்டாம் | TamilNewsToday
முக்கிய செய்திகள்
இலங்கை பொலிஸிற்கு இந்தியாவின் அன்பளிப்பு – 134 கெப் வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை – கியூபா நட்புறவை வலுப்படுத்த கலந்துரையாடல் திருகோணமலையில் 4 எண்ணெய் தாங்கிகள் புனரமைப்பு – 2 தாங்கிகள் பணிகள் நிறைவு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி முல்லைத்தீவில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் பிரதேச சபைகளுக்கு முன்னுரிமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு வானிலை எச்சரிக்கை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை இன்றைய ராசிபலன் @ 19 மே 2026 மேஷம் முதல் மீனம் வரை

நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின்சார நுகர்வோரிடமிருந்து அறவிட வேண்டாம்

PI
piragash
in இலங்கை
Sunday, 12 April, 2026 - 04:31 PM 3217 Views

மின்சார கட்டணத் திருத்தங்களின் போது, நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின்சார நுகர்வோரிடமிருந்து அறவிட வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

மின்சார உற்பத்தி, மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே மின்சார கட்டணத் திருத்த முன்மொழிவுகளில் கருத்தில் கொள்ளப்படுகின்றன என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது. கடந்த மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தில், நிலக்கரி காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவுகள் அங்கீகரிக்கப்படவில்லை. எதிர்காலக் மின்சார கட்டணத் திருத்த முன்மொழிவுகளில், நிலக்கரி தொடர்பாக காரணமாக எழக்கூடிய மேலதிக செலவுகள் அல்லது பிற நியாயமற்ற செலவுகளை மின்சாரக் கட்டணங்களில் சேர்க்க வேண்டாம் என்று ஆணைக்குழு ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்