சாய்ந்தமருதில் உணவகங்களில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ஆய்வு
Tuesday, 21 April, 2026 - 02:21 PM 13 Views
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் தொடர்ச்சியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது தொடர்பில் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் அறிவித்துள்ளார்.
மேலும் மேற்குறித்த பரிசோதனைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸதீன் வழிகாட்டுதலின் பேரில் நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாசகர் கருத்துக்கள்