அண்ணன் சீமான் :உடல் வலிமையை வைத்தே ஒருவரின் மன உறுதியை காண முடியும் என்பதே நியதி
Monday, 20 April, 2026 - 12:01 AM 18 Views
நாம் தமிழர் தம்பியின் பதிவில் இருந்து
18.04.2026 கடந்த 3 நாட்களாக அண்ணன் முழு சட்டை அணிந்து பரப்புரை மேற்கொள்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவரது அறையில் பார்த்தேன். அன்றைய தினம் பரப்புரை முடித்துவிட்டு, தமிழ் பதிப்பகம் மற்றும் பதிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாக பேச அழைத்திருந்தார்..
அவரின் கைகள் இரண்டும் கருகி கொண்டிருந்தன..நெற்றியும், மேல்தலையும் சிவந்து இருந்தது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்துதை, வைத்தே அவரின் கடும் உழைப்பை கணக்கிட முடியும்.. உடல் வலிமையை வைத்தே ஒருவரின் மன உறுதியை காண முடியும் என்பதே நியதி.. 'அண்ணே ஏதாவது மருந்து போடலாமா?' என்றேன்..
'அடவிடுப்பா' என்றார்..
தமிழ்தேசிய இனத்தின் அரசியல் விடுதலைக்கான ஒற்றை முழக்கம், விண்நோக்கி அதிர்ந்தது போல் இருந்தது..
வாசகர் கருத்துக்கள்