அமெரிக்க நடவடிக்கையின் பின்னணி: எண்ணெய் விலை வேக உயர்வு | TamilNewsToday
முக்கிய செய்திகள்
தூக்கம்: இயற்கை தரும் சிறந்த மருந்து கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் தீவுகள் – உலகிற்கு ஒரு எச்சரிக்கை மன அமைதியைத் தேடி வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுக்கள் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் புனித விரதம் – கேதார கௌரி விரதம் பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் புனிதத் தலம் – கதிர்காமம் அருளும் ஆன்மீகமும் பொங்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

அமெரிக்க நடவடிக்கையின் பின்னணி: எண்ணெய் விலை வேக உயர்வு

KO
Kobika
in வணிகம்
Monday, 20 April, 2026 - 12:07 PM 191 Views

எரிசக்தி சந்தைகள், கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை தாக்கியதிலிருந்து கடும் மாற்றங்களை சந்தித்து வருகின்றன.

அதில், ஹோர்மூஸ் கடலிணை வழியாக செல்லும் வணிக கப்பல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழிக்கு நெருங்கும் எந்தக் கப்பலும் தாக்கப்படும் என்றும் ஈரான் கூறியது. இதன் விளைவாக, Brent crude எண்ணெய் விலை 4.74% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 94.66 அமெரிக்க டொலராக (சுமார் £70.11) இருந்தது. அதே நேரத்தில் West Texas Intermediate (WTI) 5.6% உயர்ந்து 88.55 டொலராக இருந்தது.

இந்நிலையில் உலக வர்த்தக சந்தையில் எண்ணெய் விலைகள், இன்று(20.04.2026) உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஈரான் கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை தடுத்து கைப்பற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததையடுத்து இந்த உயர்வு ஏற்பட்டது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்