ரூ. 13 பில்லியன் மோசடி: NDB மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
National Development Bank PLC (NDB) தொடர்பான ரூ.13 பில்லியன் நிதி மோசடி விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு உதவியதாக அல்லது அதில் தொடர்புடையதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டால், வங்கியின் மூத்த அதிகாரிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விசாரணையின் போது, பெருமளவிலான நிதி பரிமாற்றங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் குறித்து விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் விரிவாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் இலங்கையின் வங்கி மற்றும் நிதி துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுமக்களின் வைப்புத் தொகைகள் மற்றும் நிதி பாதுகாப்பு தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வாசகர் கருத்துக்கள்