மாணவர்களுக்கு அறிவிப்பு: பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் | இலங்கை
முக்கிய செய்திகள்
ஈரானின் உள்கட்டமைப்புக்கு டிரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் திரும்புகின்றனர். கப்பல்களுடன் நீர்நிலைகளின் மீது பறக்கும் ஹெலிகாப்டர்கள். சுருக்கம் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ

மாணவர்களுக்கு அறிவிப்பு: பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

KO
Kobika
in இலங்கை
Monday, 20 April, 2026 - 12:40 PM 38 Views

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்காக இன்று ஆரம்பமாகும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை,முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 10 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்